பினாங்கு தேவாலய விவகாரத்தைக் கவனிக்க தனி போலீஸ் படை

copsபினாங்கில்  தேவாலயங்களுக்கு  வெளியில் “ஏசுநாதர்  அல்லாவின் பிள்ளை” என்று  வாசகம்  பொறிக்கப்பட்ட  பதாதைகள்  காணப்பட்டதன்  தொடர்பிலும்  அஸ்ஸம்ஷன்  தேவாலயத்தில்  பெட்ரோல்  குண்டு  வீசப்பட்டது  தொடர்பிலும்  போலீஸ்  இதுவரை  16  புகார்களைப்  பெற்றுள்ளது.

“நேற்றிரவு  அசம்பாவிதம்  எதுவும்  இல்லை. அதற்கு  இறைவனுக்கு  நன்றி”,  என மாநில  போலீஸ்  தலைவர்  அப்துல் ரஹிம் ஹனாபி  கூறினார்.

போலீஸ்  விசாரணையில்  40 விழுக்காடு  முடிந்திருப்பதாக  அவர்  தெரிவித்தார்.  எண்மரிடம்  வாக்குமூலங்கள்  பதிவுசெய்யப்பட்டன.

தேவாலயங்களையும்  பள்ளிவாசல்களையும்  கண்காணிக்க 73 அதிகாரிகளையும் 210 போலீஸ்காரர்களையும்  கொண்ட தனி  பணிப்படை  ஒன்று  அமைக்கப்பட்டிருப்பதாகவும்   அவர்  சொன்னார்.