ஜாஹிட்: தெரேசாவை அறைந்தால் வெகுமதி என்பது ஒரு மிரட்டல் அல்ல

1 zahidசிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்கை  கன்னத்தில்  அறைவோருக்கு  ரொக்கப்  பணம்  வெகுமதியாக  வழங்கப்படும்  என்று  முஸ்லிம்  என்ஜிஓ  ஒன்று  அறிவித்தது  ஒரு  மிரட்டல்  அல்ல  என்கிறார்  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி. 

“அது  ஒரு  மிரட்டல்  அல்ல  என்பதால்  அதில்  விசாரிப்பதற்கு  ஏதுமில்லை”,  என  அம்னோ  உதவித்  தலைவருமான  அஹமட்  ஜாஹிட்  கூறினார். 

“அறைதல்  என்பது  ஒரு  மிரட்டல்ல.  கொலை  என்று  சொல்லி  இருந்தால்  அது  ஒரு  மிரட்டல்”,  என்றாரவர். 

அவ்விவகாரம்  பற்றி  கொக்  போலீசில்  புகார்  செய்துள்ளார்.  பல  வழக்குரைஞர்களைத்  தொடர்புகொண்டு  பேசியதில்  என்ஜிஓ  அவ்வாறு  அறிவித்தது  குற்றவியல்  சட்டம்  503,  505  ஆகிய  பகுதிகளின்கீழ்  ஒரு  குற்றச்செயலாகும்  என்று  கருத்துத்  தெரிவித்தனர்.