அன்வார் தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாம் முன்னிடம் பெற்றுள்ளது

 

anwarதாம் காஜாங் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாத்தின் நிலையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கூறினார்.

“எனக்கு, சிலாங்கூரில் இதுதான் முன்னுரிமையாகும். நான் ஒரு முஸ்லிம் என்று எப்போதும் கூறி வந்துள்ளேன். நேற்று இதனை நான் தேவாலயத்திலும் கூறினேன். மசூதியில் மக்கள் திரண்ட்டிருப்பதை விரும்புகிறேன். இஸ்லாமிய போதனை விரிவாக்கப்பட வேண்டும்.

“இதர சமயங்களைப் பின்பற்றுபவர்களின் உரிமைகளைக் குறைக்காமல் இஸ்லாத்தின் நிலை உயர்வதை விரும்புகிறேன்”, என்று அன்வார் கூறினார்.

காஜாங் பிகேஆரின் பெனாந்தி சட்டமன்ற உறுப்பினரின் வீட்டில் நடைபெற்ற ஒரு தேநீர் விருந்து நிகழ்ச்சியில் அன்வார் பேசினார்.