பிகேஆர்: கர்பால் அரச நிந்தனை புரிந்தார் என்ற குற்றத்தீர்ப்பு ‘வக்கிரமானது’

1 pkrடிஏபி  தலைவர்  கர்பால்  சிங், அரச  நிந்தனை  குற்றம்  புரிந்திருக்கிறார்  என்ற  தீர்ப்பு  “வக்கிரமானது, நீதித்  துறைமீதிருந்த   நம்பிக்கையையே  அரித்தெடுத்து  விட்டது”  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்  கூறினார். 

“அந்தத்  தீர்ப்பு  நாட்டை  அதிர வைத்துள்ளது; மலேசியாவில்  நீதியும்  சட்ட ஆளுமையும்  அடியோடு  தோல்வியுற்றிருப்பதை  அது  காட்டுகிறது.

“அத்தீர்ப்பு  நியாயமற்றது, வக்கிரமானது,  கண்டிப்பாக தவறானது”, என  சுரேந்திரன்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறி  இருந்தார். 

“பேராக்  அரசமைப்பு  நெருக்கடியின்போது  கர்பால்  ஒரு  சட்டக்  கருத்தைத்  தெரிவித்திருந்தார்.  அது  எப்படிக்  குற்றமாகும்?”,  என்றவர்  வினவினார்.