அஸ்மின்: முதலில் காஜாங், பிறகுதான் கட்சித் தேர்தல்

azminபிகேஆர் துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி,  கட்சித்  தேர்தலில்  தம்  பதவியைத்  தக்கவைத்துக்கொள்ள  போட்டியிடுவாரா  என்பதைத்  தெரிவிக்க  மறுத்தார்.

“இன்னும்  முடிவு  செய்யவில்லை. இப்போதைக்கு  காஜாங்கில்  கவனம்  செலுத்த  விரும்புகிறேன்”,  என்றாரவர்.
அஸ்மின்   பிகேஆர்  தேர்தல்  இயக்குனருமாவார்.

வெள்ளிக்கிழமை,  சிலாங்கூர்  மந்திரி   புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  பிகேஆர்  கட்சித்  தேர்தலில்  துணைத்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிடப்போவதாக  அறிவித்து  ஆச்சரியத்தை  உண்டுபண்ணினார்.

ஆனால்,  அஸ்மி  தம்  பதவிக்குப்  போட்டி  வந்திருப்பதை  எண்ணிக் கவலைப்படுவதாக  தெரியவில்லை.

“ஒரு  ஜனநாயக்  கட்சியில்  யாரும்  எந்தப்  பதவிக்கும்  போட்டியிடலாம். ஆனால், இன்று  என்  கவனமெல்லாம்  பக்காத்தான்  ரக்யாட்டும்  அன்வார்  இப்ராகிமும்  காஜாங்கில்  வெற்றிபெற  வேண்டும்  என்பதில்தான்  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன்”,  என்றாரவர்.