ரஹிம் நோர் பெர்காசா ஆண்டுக் கூட்டத்தை திறந்து வைக்கிறார்

பெர்காசா என்ற மலாய் உரிமைகளை வலியுறுத்தும் அமைப்பின் தொன்னூற்றொன்பது தொகுதிகளைப் பிரதிநிதிக்கும் சுமார் 1,400 பேராளர்கள் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அதன் 2 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பர் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.

தேவான் செண்டரம், கொம்பிளக்ஸ் செண்டரம், கோலாலம்பூர், தாமான் செதியாவங்சாவில் அக்கூட்டத்தில் 3,000 பார்வையாளர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

அக்கூட்டத்தை முன்னாள் போலீஸ்படைத் தலைவர் ரஹிம் நோர் திறந்து வைப்பார். அவர் நாட்டிற்கு ஆற்றியுள்ள சேவைக்கு மதிப்பளித்து இக்கூட்டத்தை திறந்து வைக்க அழைக்கப்பட்டதாக இப்ராகிம் அலி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூறினார். 

-பெர்னாமா

TAGS: