என் கணவரை மறந்துவிட்டார்கள்: பிஐ பாலாவின் மனைவி ஆதங்கம்

balaகாலஞ்சென்ற  பி.பாலசுப்ரமணியம்  நாட்டுக்கு  ஆற்றிய  பணியை  மலேசியர்கள்  மறந்துவிட்டதை  நினைத்து  மனவருத்தம்  கொண்டிருக்கிறார்  அவரின்  மனைவி.

“மலேசியர்கள்  மறந்திருக்கலாம்,  அனால்  நான் மறக்க  மாட்டேன்”,என  ஏ. செந்தமிழ்ச் செல்வி  கூறினார்.

பாலசுப்ரமணியத்தின்  முதலாம்  ஆண்டு  நினைவாக  இன்று  ராவாங்கில்  உள்ள  தம்  இல்லத்தில்  சிறப்பு  வழிபாடு  நடைபெறுவதாக  செல்வி  தெரிவித்தார்.

பிஐ  பாலா  என்று  பிரபலமாக  விளங்கிய  தம்  கணவர்  இறந்த  பின்னர்,  மூன்று  பிள்ளைகளை  வைத்துக்கொண்டு  வாழ்க்கையை  ஓட்ட  மிகவும் சிரமப்படுகிறார்  செல்வி.

“ஒரு  சிறிய  பாலர்பள்ளி  வைத்திருக்கிறேன். சில  பிள்ளைகள்  வருகிறார்கள்.  சுற்றிலும்  நிறைய  பாலர்பள்ளிகள்  இருப்பதால்  போட்டி  அதிகம்”,  என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.