நீர் பாதுகாப்பானது என்பதை நிரூபித்துவிட்டு பிறகு லுவாஸ் வழக்கு தொடுக்கலாம்

sanஈயக் குட்டைகளிலிருந்து  எடுக்கப்படும்  நீரின்  தரம்  குறித்து  கேள்வி  எழுப்புவோர்மீது  வழக்கு  தொடுக்கப்போவதாக  மிரட்டும்  சிலாங்கூர்  நீர்  நிர்வாக  நிறுவனம் (லுவாஸ்) அந்த  நீர்  பாதுகாப்பானதுதான்  என்பதற்கு  இதுவரை  உருப்படியான  ஆதாரம்  காண்பிக்கவில்லை  என  கிள்ளான்  எம்பி சார்ல்ஸ்  சந்தியாகு  கூறியுள்ளார்.

“நீர்  ஆதாரங்களுக்குப்  பொறுப்பாகவுள்ள ஒரு  நிறுவனம்  பல்லாண்டு  அனுபவம்  வாய்ந்த வல்லுனர்களின்  ஆராய்ச்சி  முடிவுகளை  நிராகரிப்பது  வேடிக்கையாக  உள்ளது.

“மேலும், ஆராய்ச்சியாளர்களின்  முடிவுகளை  மறுப்பதற்கு  நம்பத்தக்க ஆய்வுகளையும்  அது  முன்வைக்கவில்லை”,என  சந்தியாகு  ஓர்  அறிக்கையில்  கூறினார்.