கோலாலும்பூரில் மீண்டும் திடீர் வெள்ளம்

floodஇன்று  பிற்பகல்  சுமார்  2.30க்கு  கன மழை  பெய்ததைத்  தொடர்ந்து  கோலாலும்பூரில்  பல  பகுதிகளில்  திடீர்  வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது.

ஜாலான்  பங்சார்,  ஜாலான்  சான்  சவ்  லின்,  ஜாலான்  செமாந்தான்  உள்பட  பல  சாலைகளில்  நீர் தேங்கி  நின்றதாக கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்ற  போக்குவரத்து  தகவல்  கட்டமைப்பு (ஐடிஸ்) கூறியது.

மாலை  ஐந்து  மணிக்கு  மழை  நின்றதும்  வெள்ளநீர்  வடியத்  தொடங்கியது.

இம்மாதப்  பிற்பகுதிவரை  கனமழை  தொடரும்  என  மலேசிய  வானிலை ஆய்வுத்துறை  ஆருடம்  கூறியுள்ளது. அதன்பின்னர்  நீண்ட  வறட்சிக்  காலம்  எதிர்பார்க்கப்படுகிறது.