இஸ்மா: வாயை அடக்கவே இனவாதிகள், தீவிரவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள்

isஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா), தன்  “வாயைப்   பூட்டிவைப்பதற்காகவே” தன்னை  இனவாத  அமைப்பு  என்றும்  தீவிரவாத  அமைப்பு  என்றும்  குற்றம் சாட்டுகிறார்கள்  எனக்  கூறியுள்ளது.

இன்று,  மலாய்  முஸ்லிம்களுக்கு   திறந்த  மடல்  எழுதிய  இஸ்மா  தலைவர்  அப்துல்லா  ஜேய்க்  அப்துல்  ரஹ்மான்,  நாட்டில்  இஸ்லாத்துக்குக்  குழிபறிக்க “யூதர்களும்”  “யூத  ஆதரவாளர்களும்”  திட்டமிட்டு  வருவதாக  எச்சரித்தார்.

எதிரிகள்,  சொந்த  உரிமைகளுக்காக   போராடும்  மலாய்  முஸ்லிம்களின்  மன உறுதியைக்  குலைக்கப்  பார்க்கிறார்கள்  என  அப்துல்லா  ஜேய்க்  கூறினார்.

“நம்மை  இனவாதிகள்,  தீவிரவாதிகள்  என்று  குற்றம்சாட்டுவதெல்லாம் நாம்  நம்  உரிமைகளைத்  தற்காக்க  எழுச்சி பெறாமல் தடுக்கும் ஒருவகை மனவியல்  தாக்குதலாகும்”, என்றாரவர்.