திராங்கானுவில் பின் பெரும்பான்மையை இழந்தது

 

Trengganu - BNதிரங்கானு புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டாவுட் அம்னோவிலிருந்து விலகிய மூன்றாவது பிரதிநிதியாவார். அவரது விலகலுடன் திராங்கானு சட்டமன்றத்தில் பிஎன் சிறுபான்மை கட்சியாகி விட்டது.

இன்று ரோஸ்லி பெர்னாமாவுக்கு அனுப்பிய பேக்ஸ் செய்தியில் தாம் கட்சிப் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

திரங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் மற்றும் கிஜால் சட்டமன்ற உறுப்பினர் கஸாலி தாயிப் ஆகிய இருவரும் அம்னோவிலிருந்து விலகிய சில மணி நேரத்திற்குப் பின்னர் ரோஸ்லி வெளியேறியுள்ளார்.

தற்போது திராங்கானு சட்டமன்றத்தில் 14 பிஎன் உறுப்பினர்களும 15 பக்கத்தான் ரக்யாட் உறுப்பினர்களும் இருப்பதோடு அம்னோவிலிருந்து விலகிய மூவரும் சுயேட்சை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.