‘மகளைத் திருப்பி அனுப்பாத முன்னாள்-கணவரைக் கைது செய்க’

arrestநீதிமன்ற  உத்தரவைப்  பின்பற்றி  தன்  மகளைத்  திருப்பி அனுப்ப  மறுக்கும்  மதமாறிய  முன்னாள் கணவரைக்  கைது  செய்ய  வேண்டும்  என்று  இந்திரா  காந்தி  விரும்புகிறார்.

மகளைத்  திருப்பிக்  கொடுக்க   கே.பத்மநாதன் @ முகம்மட்  ரித்துவான்  அப்துல்லாவுக்கு  வழங்கப்பட்டிருந்த  கெடு  இன்றுடன்  முடிவுக்கு  வருகிறது.

இதுவரை  அவர்  திருப்பி  அனுப்பவில்லை.   மகளைத் திருப்பி  அனுப்பும்  “நிலையில் இல்லை”  என்று  அவர்  தெரிவித்திருப்பதாக  இந்திரா  காந்தியின்  வழக்குரைஞர்  எம்.குலசேகரன்  கூறினார்.

எனவே,  நீதிமன்ற  உத்தரவை  அவமதித்த  குற்றத்துக்காக  பத்மநாதனைக்  கைது  செய்யக்  கோரி  இந்திரா  போலீஸில் புகார்  செய்வார்  என  குலசேகரன்  குறிப்பிட்டார்.