பிகேஆர் இளைஞர் தலைவர்: காலிட் எம்பி பதவியிலிருந்து விலக வேண்டும்

shamசிலாங்கூர்  மந்திரி புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  வெளியேற  வேண்டும்  என்று பிகேஆர்  இளைஞர்  தலைவர்  ஷம்சுல்  இஸ்கண்டர்  முகம்மட்  அகின் (இடம்), வெளிப்படையாகவே  கோரிக்கை  விடுத்துள்ளார்.

“காலிட்  மந்திரி  புசார்  பதவி என்றென்றும்  தனக்குத்தான்  என்று  நினைத்துக்  கொண்டிருக்க  முடியாது. அது மக்களும்  கட்சியும்  அவருக்கு  அளிக்கும்  அதிகாரத்தைப்  பொறுத்தது.

“இப்போது  அவர்  அடிநிலை  உறுப்பினர்களிடமிருந்து  அதிகாரம்  பெறத்  தவறிவிட்டார். அது, அவர்  தொடர்ந்து  பதவியில்  இருக்கக்கூடாது  என்பதற்குத்  தெளிவான  அறிகுறியாகும்”, என்று  ஷம்சுல்  கூறியதாக  பெரித்தா  ஹரியான்  அறிவித்துள்ளது.

காலிட்,  கோலா  சிலாங்கூர்  பிகேஆர்  தொகுதித்  தேர்தலில்  எஸ்.மாணிக்கவாசகத்திடம்  தோல்வி  அடைந்ததை  அடிப்படையாக  வைத்து  ஷம்சுல்  இவ்வாறு  கூறினார்.