மந்திரி புசராக நியமனம் செய்யப்படுவதற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரா என்பதை மட்டுமே பரிசீலனை செய்ய வேண்டும் என்பதில்லை என சிலாங்கூர் அரண்மனை கூறுகிறது.
அந்த வகையில், அரண்மனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல்களில் இல்லாத ஒரு சட்டமன்ற உறுப்பினரைக்கூட மந்திரி புசாராக சுல்தான் தெரிவு செய்யலாம்.
“மந்திரி புசார் நியமனம் சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றுள்ளதாக தாம் கருதும் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் சுல்தான் பரிசீலிப்பார்”. சுல்தானின் தனிச் செயலாளர் முகம்மட் முனிர் பானி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறினார்.
பெரும்பான்மையை சட்டமன்றத்தில் வேண்டியதில்லையோ? என்ன ஜனநாயகமோ?. சட்டத்தைப் பின்பற்றுவதற்கு யார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்?.
பிறகு தேர்தல் மண்ணாங்கட்டி எல்லாம் எதற்கு??? மாநில அரசமைப்பின்படி ஜனநாயக முறையோடு பெரும்பான்மை உள்ளது என்று நிரூபித்தும் இந்தனை போராட்டம்/ பொல்லாப்பு. அரண்மனை சுயமாக ஒருவரை பெரும்பான்மை உள்ளவரென்று கருதி எம்பியாக
தேர்ந்தெடுப்பதென்றால் மக்களாட்சி ஜனநாயகம் என்பதின் பொருள்தான் என்ன????
நீதி கட்சி தெரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யுமே ?
ஜனநாயகமாவது மண்ணாங்கட்டியாவது. தேர்தலாவது குப்பையாவது. எல்லாமே சுல்தான் என்றாகிவிட்டது. 1969ல் ‘முகம்மது பின் துக்ளக் ‘ என்றொரு தமிழ்ப் படம். அப்படம் நம் நாட்டில் திரையிட தடை செய்யப்பட்டது. சுல்தான்கள் புரியும் அநியாங்களை சித்தரிக்கும் படம். தற்போதைய ‘பதவி’ வெறிப்பிடித்த கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்று இப்படம், அன்றே நன்றாக சித்தரிக்கப்பட்டது. கதை, வசனம், தயாரிப்பு, டைரெக்ஷன், நடிப்பு: சோ.
அரண்மனை, வான் அசிசாவை நிரகரிப்பதற்கான தக்க காரணம்தான் என்ன என்பதை தெளிவுபடுத்தினால் மக்களுக்கும் ஓரளவு தெளிவு பிறக்கும் அல்லவா??? ஹாடி சொன்னார் ஆட்டுக்குட்டி சொன்னார் என்பதெல்லாம் ஜனநாயக முறைக்கு மரியாதையல்லவே!!!!
ஒரு பக்கம் சட்டம் முடியாது என்கிறது. இன்னொரு பக்கம் சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிறது. ஆனால் சட்டம் தான் வெற்றிபெறும்.
சிங்கம், நான் மிகவும் ரசித்த படம் முகம்மது பின் துக்ளக். அதில் துக்ளக் மீண்டும் மன்னராக வந்தாலும், தேர்தலில் நின்று, ஜெயித்து தான் ஆராஜகம் செய்வார் ! 350 MP களையும் துணை பிரதமர் ஆக்கிவிடுவார் … கிளி ஜோசியம் பார்க்கும் மனோராம அமைச்சர் ஆகிவிடுவார் … எல்லாம் துக்ளக் தர்பாராக இருக்கும் ! அற்புதமான தனிமனிதனின் அராஜகத்தை விளக்கும் அரசியல் மற்றும் அத்யாவசிய படம் … யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான் ! இதை எல்லோரும் புரிந்து கொண்டால் சரி ! தெரு ஆர்பாட்டம் எப்பொழுது வரும் என்றால் , சட்டத்தை மதிக்காத பொழுது !
தேர்தலில் நின்று வென்றவர் விரலை சூப்பிக்கொண்டிருக்க, தேர்தலில் நிற்காதவன் எல்லாம் அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கலாம் என்றால் – ஜனநாயக மரபை மீறிய அந்தச் செயலை ஏற்றுக்கொண்ட நாம் …சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மை இல்லாதவர் அல்லது சட்டமன்ற உறுப்பினரல்லாதவர் மந்திரி புசாராகலாம் என்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆனால், இப்படியெல்லாம் ஜனநாயத்தில் குரல்வளை நெரிக்கப்படும் போது தெரு ஆர்ப்பாட்டம் தான் தீர்வைக் கொண்டு வரும். பாதிக்கப்பட்டவர்கள் அதைச் செய்யும்போது சர்வாதிகாரம் தற்கொலை செய்துகொள்ள நேரிடும்..
for the people by the people from the people = மக்கள் நாயகம்
from the சுல்தான் by the சுல்தான் from the சுல்தான் = ?
ஏன் சட்ட மன்ற உறுப்பினர் இல்லாத ஒருவரை மந்திரி புசாராக நியமிக்க வேண்டியது தானே.இது தன புத்தி ஜனநாயகம் என்று உலகுக்கு புதியா கண்டு பிடிப்பாய் காட்டுங்களேன்.
ஜனநாயகம் எங்கே ?