சுல்தானின் உத்தரவுக்கு பிகேஆரும் டிஎபியும் பணிய மறுத்தது துரோகச் செயலாகும்

 

Sultan -Tresonous actசிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு ஒவ்வொரு கட்சியும் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சுல்தானின் கட்டளைக்கு பிகேஆரும் டிஎபியும் பணிய மறுத்திருப்பது துரோகச் செயலாகும் என்று அரண்மனை குற்றச்சாட்டியுள்ளது.

இன்று காலையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகமட் முனிர் பாணி பாஸ் மட்டுமே சுல்தானின் வேண்டுகோளுக்கு ஏற்ப நடந்து கொண்டுள்ளது என்று கூறினார்.

“ஆகஸ்ட் 27 இல் சுல்தான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டிஎபியும் பிகேஆரும் மேற்கொண்ட செயலால் சிலாங்கூர் சுல்தான் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளார்.

“டிஎபி மற்றும் பிகேஆர் ஆகியவற்றின் செயல் அரச அமைவுக்கு எதிரான அவற்றின் ஆணவத்தை பிரதிபலிக்கிறது என்பதோடு அது சிலாங்கூர் சுல்தானுக்கு எதிரான துரோகச் செயலாகும் (tindakan derhaka)”, என்றாரவர்.