சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு ஒவ்வொரு கட்சியும் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சுல்தானின் கட்டளைக்கு பிகேஆரும் டிஎபியும் பணிய மறுத்திருப்பது துரோகச் செயலாகும் என்று அரண்மனை குற்றச்சாட்டியுள்ளது.
இன்று காலையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகமட் முனிர் பாணி பாஸ் மட்டுமே சுல்தானின் வேண்டுகோளுக்கு ஏற்ப நடந்து கொண்டுள்ளது என்று கூறினார்.
“ஆகஸ்ட் 27 இல் சுல்தான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டிஎபியும் பிகேஆரும் மேற்கொண்ட செயலால் சிலாங்கூர் சுல்தான் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளார்.
“டிஎபி மற்றும் பிகேஆர் ஆகியவற்றின் செயல் அரச அமைவுக்கு எதிரான அவற்றின் ஆணவத்தை பிரதிபலிக்கிறது என்பதோடு அது சிலாங்கூர் சுல்தானுக்கு எதிரான துரோகச் செயலாகும் (tindakan derhaka)”, என்றாரவர்.
ஜனநாயகத்துக்கு துரோகம் இழைப்பது தவறில்லையோ?.
அரண்மனைக்கு ஜெய்!!! இதுதான் ஜனநாயகம் என்று பாரிசானும் பாசும் சொல்கிறது என்று நினைக்கிறேன்!!!
அரசியலமைப்பு சட்டத்தை திசை திருப்புகிறார்கள்.
முதலில் அன்வர் அவர்களை சற்று பிடிவாதத்தையும் பதவி வெறியையும் விடனும்..அப்புறம் எல்லாம் நல்லதாவே நடக்கும்.
இந்த நாட்டை 1957 முதல் 1970 வரையில் ஆண்ட டுன்குவிக்கு பதவி வெறியா ? 1970 முதல் 1975 வரையில் ஆண்டா துன் இசக்கிக்கு பதவி வெறியா ? 1975 முதல் 1981 வரையில் ஆண்டா துன் ஹுசெஇன் ஒண்ணுக்கு பதவி வெறியா ? 1981 முத்த 2003 வரையில் 22 ஆண்டுகள் இந்த நாட்டையே தனது கிடுக்கு பிடியில் வைத்து நாட்டையே மாற்றி அமைத்தாரே அவருக்கு பதவி வெறியா ? 2003 முதல் 2008 வரையில் ஆண்டாரே துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி அவருக்கு பதவி வெறியா ? அல்லது இப்போது பதவியில் இருக்கும் இன்றைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நசிப்பிக்கு பதவி வெறியா ? என்று அடிவருடி சாந்திக்கு பதில் சொல்ல முடியுமா?.தனக்கு இழைக்கப்பட்ட அனுதிக்கு எதிராக போராடாடினால் இந்த அடிவருடி சாந்தி பதவி வெறி என்று பொஇயுரைகின்றார்.அன்வரை போன்ற போராட்ட குணம் படைத்தவர்கள் உலகில் கோடியில் ஒருவர் தன இருப்பார்.இப்படி போன்ற ஒருவரை கிழ்த்தரமாக எழுதுவதக்கு கில்தரமானவர்கள் முன்வருவார்கள்.அடிமைகள் போராட்டத்தை பற்றி பேசக்குடாது.எழுதக்கஊடாது.சாந்தி அடிமையில் சுகம் காணுங்கள்.
சாந்திக்கு செலான்ஜார் தோட்டம் வா வா என்கிறது. எப்படி வசதி???
வாழ்க ஜனநாயகம் வாழ்க அரசராட்சி . இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவும் ஒரு சின்ன இந்தோனேசியா வாக மாற போகிறது .