எரிபொருள் விலை-உயர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர்களும் கலந்துகொள்வர்

protestபுதன்கிழமை  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  நடைபெறும்  எரிபொருள்  விலை-உயர்வை  எதிர்க்கும்  ஆர்ப்பாட்டத்தில்  பாஸ்  இளைஞர்  பகுதியும்  கலந்துகொள்ளும்.

அதன்  தலைவர்  சுஹாய்சான்  காயாட், உலக முழுவதும்  எண்ணெய்  விலை  குறைந்துவரும்போது அரசாங்கம் எரிபொருள்  விலையை  உயர்த்துவதற்குக்  காரணம்  ஏதுமில்லை  என்றார்.

“பொதுமக்கள்  கிளர்ந்தெழுந்து  எரிபொருள்  விலை-உயர்வுக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  இதுவே  சரியான  தருணம். எண்ணெய்  உற்பத்தி  செய்யும்  நாட்டின்  குடிமக்கள்  என்ற  முறையில்  நாட்டின்  விளைபொருள்களை  அனுபவிக்கும்  உரிமை  அவர்களுக்கு  உண்டு. எரிபொருள்  விலை உயர்வால்  அவர்கள்  துன்புறக்கூடாது”, என்றாரவர்.

பணவீக்கத்துக்கு  எதிரான  கூட்டமைப்பு  அந்த   அக்டோபர்  8-ஆம்  நாள் ஆர்ப்பாட்டத்துக்கு  ஏற்பாடு  செய்துள்ளது.