இன்று அதிகாலை கோலாலும்பூர் புக்கிட் பிந்தாங்கில் ஓர் இரவு விடுதிக்கு வெளியில் நிகழ்ந்த ஒரு வெடிப்பில் குறைந்தது 14 பேர் காயமடைந்தனர்.
சன் கொம்ளெக்ஸுக்கு வெளியில் ஒரு காருக்கு அடியில் குண்டு வெடித்ததுதான் இதற்குக் காரணம் என ஊடகத் தகவல்கள் கூறின.
குண்டு வைத்தவர்கள் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சீன நாளேடுகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை கோலாலும்பூர் சிஐடி தலைவர் உறுதிப்படுத்தியதாக அஸ்ட்ரோ அவானி கூறியது.
குண்டு வெடித்த அதே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு காரிலிருந்து வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக கோலாலும்பூர் போலீஸ் துணைத் தலைவர் கைரி அஹ்ராசா தெரிவித்ததாக டிபிஏ செய்தி நிறுவனம் கூறிற்று.


























சட்டம் தன் கடமையை செய்யும் . நாம் சிறந்த தலைவரை கொண்டுஇருகிரொம்
குண்டு வைக்கும் கலாச்சாரம் இங்கேயும் வந்துவிட்டதா அட கடவுளே …நாடு அமைதியா இருந்தா பிடிக்காத போலிருக்கு குண்டு வைக்கும் மிருகங்களுக்கு.
இந்த கலாச்சாரம் ஒன்றுதான் இங்கு இல்லாமல் இருந்தது அதுவும் வந்துவிட்டதா அப்போது நாடு விளங்கிடும்!!!
குண்டு ஒன்னு வெச்சிருக்கேன். வெடி குண்டு ஒன்னு வெச்சிருக்கேன் என்று பாட தோணுது.
குண்டர் கும்பல் என்று எப்படி சீன நாளேடுகளுக்குத் தெரிந்தது? இது நாள் வரை குண்டர் கும்பல்கள் இப்படி செய்தது இல்லையே. கவனத்தைத் திசை திருப்புகிறார்களா..!
கேட்க மகிழ்ச்சியா இருக்கு ,திருட்டு மந்திரிகள் இருக்கும் இடமா பார்த்து வையுங்கள் ,பொது மக்களுக்கு காயம் படாமல் .இதுதாண்டி ஆரம்பம் உங்களுக்கு !
ஒரு கையெறி குண்டு வெடிததுக்கே 14 பேர் காயம் ஒருவர் மரணம் ! மீதி இருந்த இரண்டு குண்டும் வெடித்திருந்தால் ? ஐயோ !
இது ஒரு வேளை மலேசியாவில் தேச நிந்தனை சட்டத்தை அகற்ற வேண்டும் என ஐ.நா.வின் கோரிக்கையால் அதனை நீக்க கூடாது என நினைக்கும் சர்வதிகார தரப்பினரின் வேளையாக இருக்குமோ ?
வெடி வைப்பது வேறு யாரு? உலகமே வெடித்து கொண்டிருக்கிறது.