ஜாஹிட்: நுருல்மீது விசாரணையா? ஐஜிபி-தான் பதில் சொல்ல வேண்டும்

dodgeலெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்மீது  போலீஸ்  விசாரணை  செய்கிறதா  என்று  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி-இடம்  வினவியதற்கு அக்கேள்விக்கு  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்தான்  பதில் சொல்ல  வேண்டும்  என்றார்.

“அது  போலீஸ்  நடவடிக்கை  பற்றிய  கேள்வி. அதற்குப்  பதில்  சொல்ல  வேண்டியவர்  ஐஜிபி”, என ஜாஹிட்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கு  தொடர்பில்  நாடாளுமன்றத்தில்  தெரிவித்த  கருத்துக்காக  நுருல் இஸ்ஸாமீது  போலீஸ்  விசாரணையைத்  தொடங்கி  இருக்கிறார்கள்.

அவரது  உரை  தேச நிந்தனைக்  கருத்துகள்  கொண்டது  என  கூலிம் பண்டார்  பாரு  எம்பி  சுல்கிப்ளி  நூர்டின்  புகார்  செய்ததை  அடுத்து  போலீஸ்  விசாரணையைத் தொடங்கியுள்ளது.