த மலேசியன் இன்சைடர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்

 

TMIarrestsகிளந்தான் மாநில ஹுடுட் சட்ட மசோதா ஆட்சியாளர்கள் மன்றம் நிராகரித்து விட்டது பற்றிய செய்தி அறிக்கைக்காக த மலேசியன் இன்சைடர் நிருவாக ஆசிரியர் லையோனல் மொராஸ் கைது செய்யப்பட்டார்.

அவருடன் மூத்த ஆசிரியர்களான அமின் ஷா இஸ்கந்தர் மற்றும் ஸுல்கிப்பிலி சுபாங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அம்மூவரும் தேச நிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ் கைது செய்யப்பட்டு டாங்வாங்கி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் இன்றிரவு முழுவதும் அங்கு தடுத்து வைக்கப்படுவர் என்று அவர்களது வழக்குரைஞர் ஸ்யாரெட்ஸான் ஜோகன் மலேசியாகினியிடம் கூறினார்.

அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்களுக்கு ரிம5,000 வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.