54 பயணிகளுடன் சென்ற விமானம் பாப்புவா பகுதியில் காணாமல் போய்விட்டது

 

Aircraftlostஐந்து விமானப் பணியாளர்கள் உட்பட, 54 பேருடன் பயணம் மேற்கொண்டிருந்த ஓர் இன்தோனேசிய விமானம் காடு நிறைந்த பாப்புவா கிழக்குப் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இழந்து விட்டது என்று பாசார்னாஸ் அறிவித்தது. இருட்டி விட்டதால் விமானத்தை தேடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்று மேலும் கூறியது.

விமான விழுந்து நொருங்கிவிட்டது என்பதை தங்களால் உறுதிப்படுத்த முடியாது. விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று பாசார்னாசின் தலைவர் பாம்பாங் சோலிஸ்ட்யோ ராய்ட்டர்ஸிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.