தெங்கு அட்னான்: ஐஎசிசி மாநாட்டில் அரசாங்கத்தைக் குறைகூறியவர்கள் பீடிக்கப்பட்டவர்கள்

 

Adnanpossedபுத்ரா ஜெயாவில் நடைபெற்ற 16 ஆவது அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் (ஐஎசிசி) அரசாங்கத்தைக் குறைகூறியவர்களை மூன்றாம் தரப்பினரால் பீடிக்கப்பட்டவர்கள் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று சாடினார்.

மூன்றாம் தரப்பினர் யார் என்று கூறாமல், அவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான பரப்புரைகளால் ஐஎசிசி பேராளர்கள் பீடிக்கப்பட்டுள்ளனர் என்றாரவர்.

நேற்று முடிவுற்ற ஐஎசிசியின் மூன்று நாள் மாநாட்டில் உயர்மட்ட அனைத்துலக என்ஜிஒ-கள் நஜிப்பின் ரிம2.6 பில்லியன் தனிப்பட்ட வங்கிக் கணக்கு குறித்து கேள்விகள் எழுப்பின.

“அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது. நாம் பேசிக்கொள்வதற்காக சந்திப்பு நடத்தினோம். அது நாட்டில் மோசமான நிலவரத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு மேடையல்ல”, என்று அட்னான் வருத்தப்பட்டுக் கொண்டார்.