மலேசியாவுக்கான சீனத் தூதர் ஹுவான் ஹூய்காங் பெட்டாலிங் ஸ்திரீட்டில் தெரிவித்த கருத்துகளுக்காக விஸ்மா புத்ராவுக்கு அழைக்கப்பட்ட விவகாரத்தில் தாம் கருத்துரைத்தது தவறுதான் என்பதைச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் ஒப்புக்கொண்டார்.
என்றாலும், வெளியுறவு அமைச்சின் விவகாரங்களில் தலையிடும் நோக்கில் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“தலையிடும் எண்ணம் இல்லவே இல்லை”, என மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ் செய்தியில் நஸ்ரி குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர்கள் சிலர் தம்முடன் ஆலோசனை கலக்காமலேயே தூதர் விவகாரத்தில் தலையிட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் வருத்தப்பட்டிருப்பது குறித்து வினவியதற்கு நஸ்ரி இவ்வாறு கூறினார்.
























இதுவரை எதைத்தான் உறுப்படியாக சொல்லியிருக்கிறாய்,செய்திருக்கிறாய்?
இன்றொரு அறிக்கை,நாளை வேறொரு செயல்.
போனால் போகுட்டும் போடா! என்று சிவாஜி பாணியில் பாடிவிட்டுப் போங்கள்!
எந்த காலத்தில் நீங்க சுயமா சிந்தித்து பேசினீர்கள்…? துப்புக் கெட்ட பசங்க தானே நீங்க…?