மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார மீள்திறனைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல செயலாக்கமான மற்றும் விரிவான ஆரம்பகால தலையீட்டு நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும்.
இன்று தனது தலைமையில் நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை குழுவின் (National Economic Action Council) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இதுவும் ஒன்று என பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சமீபத்திய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள், உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மோதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
எரிசக்தி விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி போன்ற அபாயகரமான வழித்தடங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் மாற்று வழிகளை ஆராய்தல் உள்ளிட்ட முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அன்வர் கூறினார்.
“ஹரிராயா பண்டிகைச் சூழல் இன்னும் நிலவினாலும், மக்களின் நல்வாழ்வும், குறிப்பாக வாழ்க்கைச் செலவும், மடானி அரசின் முன்னுரிமையாகத் தொடர்கிறது,” என்று அவர் முகநூலில் பதிவிட்டார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், அது தொடர்பான தகவல்கள் நேரடியாகப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த சவாலை எதிர்கொள்வதில், நாடு நிலையானதாகவும் மீள்திறன் கொண்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய அமைதி, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வு ஆகியவை இன்றியமையாதவை என்று பிரதமர் கூறினார்.
























