மகாதிரின் ஆள் அன்வாரின் விடுதலைக்குக் குரல் கொடுக்கிறார்

khaiஎதிரணி  தலைவர்  அன்வார்  இப்ராகிம்   பிரதமர்  ஆவதற்குத்  தகுதியற்றவர்  என்பதற்கு  ‘50 காரணங்கள்’  என்ற  நூலை  முன்பு  வெளியிட்டிருந்தவர்  இன்று  அவரை  விடுதலை  செய்யும்  கோரிக்கையை  வரவேற்கிறார்.

அம்னோ  பத்து  கவான் தொகுதி  முன்னாள்  தலைவர்  கைருடின்  அபு  ஹசான்,  சுங்கை  பூலோ  சிறையில் உள்ள  அன்வாரை விடுவிக்கும்  எந்த  முயற்சிக்கும்  தம்  முழு  ஆதரவு  உண்டு  என்றார்.

“ஏற்கனவே  அவர்  தண்டிக்கப்பட்டு  விட்டார். இப்போது  அவர்  மலேசிய  அரசியல்  களத்தில் பங்காற்ற  சிறைக்கு வெளியில்  இருக்க  வேண்டும்”, என்றவர்  சொன்னார்.

அம்னோ  அடிநிலைத்  தலைவரும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிருடன்  இணைந்து  செயல்படுபவருமான  கைருடின்,  1எம்டிபி-க்கு  எதிராக நிறைய  புகார்கள்  செய்ததை  அடுத்து  மலேசியப்  பொருளாதாரத்தைக்  கீழறுக்க  முயல்கிறார்  என்று  குற்றஞ்சாட்டப்பட்டு  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்பட்டு  அண்மையில்தான்  பிணையில்  வெளியில்  வந்தார்.