நாய் வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே அவற்றை வைத்திருக்க வேண்டும்

rabiesபெர்லிசில்  வெறிநாய்க்கடி  நோய்  மீண்டும்  பரவுவதைத்  தடுக்கும்  நோக்கில்  நாய்  வைத்திருப்பவர்கள்  தங்கள்  செல்லப்  பிராணிகளை  வீட்டிலேயே  வைத்திருக்க  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போது அந்நோய்  கட்டுப்பாட்டுக்குள்  இருக்கிறது  என்றாலும்  நாய்  வைத்திருப்பவர்கள்  முன்னெச்சரிக்கையுடன்  இருப்பது  அவசியம்  என  மாநில  விவசாய,  விவசாயம்  சார்ந்த  தொழில்குழுத்   தலைவர்  அஹ்மட்  பக்ரி  அலி  கூறினார்.

ஆகஸ்ட்  19-இல்,  1953 விலங்கினச்  சட்டத்தின்கீழ்  விடுக்கப்பட்ட வெறிநாய்க்  கடி   நோய்  கட்டுப்பாட்டு  ஆணை  இன்னமும்  அமலில்  இருப்பதாக  அவர்  சொன்னார்.

அதிகாரிகளின்  அனுமதியின்றி  நாய்  உரிமையாளர்கள்  அவர்களின்  செல்லப்  பிராணிகளை  ஓரிடத்திலிருந்து  இன்னோர்  இடத்துக்குக்  கொண்டு  செல்லக்  கூடாது  என்றும்  அவர்

“செல்லப்  பிராணிகள்  நோயின்  காரணமாக  இறந்தால் உடனே  அதைத்  தெரிவிக்க  வேண்டும். ஆண்டுதோறும்  வெறிநாய்க்  கடி தடுப்பூசியும்  போட்டு  வர  வேண்டும்”, என்றாரவர்.