அரசாங்க வீட்டுவசதிக் கடனுக்கு பூமிபுத்ரா வழக்குரைஞர் நிறுவனம் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி இல்லை

chua eஅரசாங்க  வீட்டுவசதிக்  கடன்களுக்கு  விண்ணப்பிக்கும்  அரசாங்க  ஊழியர்கள்  பூமிபுத்ரா  பங்காளிகளைக்  கொண்ட  வழக்குரைஞர்  நிறுவனங்களைத்தான்   பயன்படுத்த  வேண்டும்  என்ற  நிபந்தனை  எதுவும்  கிடையாது  என  நிதி  துணை  அமைச்சர்  சுவா  டீ  யோங்  கூறினார்.

இதன்  தொடர்பில்  பொதுத்  துறை  வீடமைப்பு  நிதி  நிறுவனத்திடம்  விளக்கம்  கேட்டதாகவும்  அது  அரசாங்கக்  கொள்கையில்  அப்படிப்பட்ட  நிபந்தனை  இல்லை  என்று  உத்தரவாதம்  அளித்ததாகவும்  அவர்  தெரிவித்தார்.

அப்படி  ஒரு  நிபந்தனை  இருப்பதாகவும்  அது  வழக்குரைஞர்  தொழிலில்  இனவாதத்தை  ஊக்குவிக்கிறது  என்றும்  மசீச  இளைஞர்  சட்ட விவகாரப் பிரிவுத்  தலைவர்   இங்  கியான் கூறியிருந்தார்.