ஜிஎஸ்டி-இல் அதிகரிப்பு இல்லை: பிரதமர் உத்தரவாதம்

gstநாட்டின்  வருமானம்  குறைந்து  கொண்டு  வந்தாலும்  இம்மாதப்  பிற்பகுதியில்  பட்ஜெட்டைத்  திருத்தி  அமைக்கும்போது  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)  அதிகரிக்கப்படாது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  உத்தரவாதம்  அளித்தார்.

“ஜிஎஸ்டி  அதிகரிக்கப்பட்டால்  அதை  ஏற்றுக்கொள்ளும்  சக்தி  மக்களுக்கு  இருக்காது. ஜிஎஸ்டி  அதிகரிப்புப்  பற்றி  யோசிக்கவில்லை”, என  இன்று  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்  கூட்டத்தில்  நஜிப்  கூறினார்.

மலேசியாவில்   கடந்த  ஆண்டு  ஏப்ரல்  முதல்  நாள்  ஆறு  விழுக்காடு  ஜிஎஸ்டி  அமலுக்கு  வந்தது.