நேப்பாளத்தில் பயணிகள் விமானத்தைக் காணவில்லை

airplமேற்கு  நேப்பாளத்தில், இரு  வெளிநாட்டவர்  உள்பட,  21 பேருடன் பயணித்த   சிறு  விமானம் ஒன்று மாயமானது  என விமான  நிலைய  அதிகாரி  ஒருவர்  தெரிவித்தார்.

தாரா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த Twin Otter  ரக   விமானம்  18 பயணிகளையும்  மூன்று  விமானப்  பணியாளர்களையும்  ஏற்றிக்கொண்டு  காட்மண்டுவுக்கு  125 கிலோ  மீட்டர்  தொலைவில்  உள்ள  ஜோம்சோம்  நகரிலிருந்து  பொகாராவுக்குப்  பறந்து  சென்றபோது  விமான  நிலையத்துடனான  தொடர்பை  இழந்தது.

இரண்டு  ஹெலிகாப்டர்கள்   விமானத்தைத்  தேடிக்  கொண்டிருப்பதாக விமான  நிலைய  அதிகாரி  யோகேந்திர  குமார்  கூறினார்.

-Reuters