இந்தோனேசியாவில் 2019–குள் எல்லா சிவப்பு-விளக்குப் பகுதிகளையும் மூடிவிட திட்டம்

indoneஇந்தோனிசியாவில்  விபச்சாரத்தை  அடியோடு  ஒழிக்கும்  முயற்சியாக  2019-க்குள்  எல்லா  சிவப்பு-விளக்குப்  பகுதிகளும் அழிக்கப்படும்  என  அந்நாட்டு  சமூக  விவகார  அமைச்சர்  கூறியதாக  ஜகார்த்தா  போஸ்ட்  அறிவித்துள்ளது.

அரசாங்கம்  ஏற்கனவே  68  சிவப்பு- விளக்குப்  பகுதிகளை  மூடிவிட்டதாகக்  கூறிய  அமைச்சர்  கொபிபா  இந்தர்   பரவன்சா,  அடுத்த  மூன்றாண்டுகளில்  மேலும்  100  அழிக்கப்படும்  என்றார்.

2014-இல்  இந்தோனேசியாவின்  இரண்டாவது  மிகப்  பெரிய   நகரமான  சுராபாயா  தென்கிழக்காசியாவின்  மிகப்  பெரியதாக  விளங்கிய  சிவப்பு-விளக்குப்  பகுதியை  இழுத்து  மூடியது  குறிப்பிடத்தக்கது.