1எம்டிபி தொடக்கத்திலிருந்தே நிலையற்றிருந்தது: அமைச்சர் ஒப்புக்கொள்கிறார்

wahidகுறைந்த  மூலதனமும்  கூடுதல்  கடன்களும்  1எம்டிபி  தொடக்கத்திலிருந்து  நிலையற்றிருந்தற்குக்  காரணம்  என்கிறார் பிரதமர்துறை  அமைச்சர்  அப்துல்  வாஹிட்  ஒமார்.

குறைவான  மூலதனத்துடன்  தொடங்கப்பட்ட  நிறுவனம்  அது  என்றாரவர்.

“அதனால்  நிறைய  கடன்  வாங்கப்பட்டது.  இப்போது  நிர்வாக  வாரியம்  அதைச்  சீரமைக்கும்  பணியை  மேற்கொண்டிருக்கிறது”, என்று  அமைச்சர்  அமெரிக்க  ஒலிபரப்பு  நிறுவனமான  சிஎன்பிசி-இடம்  தெரிவித்தார்.