கடை உடைக்கப்படுவதைத் தடுக்க மந்திரி புசாரிடம் மகஜர்

shopகோலா  சிலாங்கூர்   ஜாலான்   சுங்கை  பூலோவில்  உள்ள   தன்   கடை  உடைக்கப்படுவதைத்   தடுக்கும்    கடைசி   முயற்சியாக    ஜெய் ஸ்ரீ  ராஜூ  சிலாங்கூர்    மந்திரி   புசார்   முகம்மட்   அஸ்மின்   அலி-இடம்    மகஜர்  ஒன்றைக்   கொடுத்துள்ளார்.

“நீண்ட   காலமாகவே    கோலா   சிலாங்கூர்    மாவட்ட    மன்ற(எம்டிகேஎஸ்)த்தின்   அனுமதியுடன்    கடை   வைத்திருக்கிறேன். இந்தக்  கடைக்கு  மாற்றாக   வேறு   ஒரு  கடை  கொடுங்கள்    என்று   கேட்கிறேன், அவ்வளவுதான்.

“அது  வரையில்  கடை  உடைப்பைத்   தள்ளிப்போடுங்கள்”,  என்றவர்  அந்த   மகஜரில்    கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உணவகத்தையும்   கொண்ட    அவரது   கடையைக்  காலி   செய்யக்   கோரி    அவருக்குக்   கொடுக்கப்பட்டிருந்த   கெடு    இன்றுடன்   முடிவுக்கு   வருகிறது.

அவருடைய   மகஜர்  இன்று   காலை   சிலாங்கூர்    மாநிலச்   செயலகத்தில்    அஸ்மினின்    தனிச்  செயலாளர்    ஷரிசால்   சாலேயிடம்    ஒப்படைக்கப்பட்டது.

அப்போது  பார்டி   சோசலிஸ்  கட்சி    உறுப்பினர்களும்   அவருடன்   இருந்தனர்.