சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங் உத்தேச கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவேக ரயில் (எச்எஸ்ஆர்) மீது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு-நாள் அலுவல் பயணம் மேற்கொண்டு இன்று மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவுக்கு வந்து சேர்ந்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிற்பகல் மணி 1-க்குப் பிரதமரின் அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீபெர்தானாவுக்கு தம் குழுவினருடன் வந்து சேர்ந்த லீ-யை வரவேற்றார்.
இருவரும் தனியே சந்தித்துப் பேச்சு நடத்தினார். பின்னர் நஜிப்பின் பகல் விருந்துபசரிப்பில் லீ கலந்து கொண்டார்.
பகலுணவுக்குப் பின்னர் எச்எஸ்ஆர் கையெழுத்திடும் நிகழ்வில் இருவரும் கலந்து கொள்வர்.
அந்நிகழ்வை அடுத்து நஜிப்பும் லீயும் கூட்டாக செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவார்கள்.