அலுவல் பயணம் மேற்கொண்டு புத்ரா ஜெயா வந்தார் சிங்கை பிரதமர்

singசிங்கப்பூர்   பிரதமர்   லீ  ஹிசியான்   லூங்   உத்தேச   கோலாலும்பூர்-  சிங்கப்பூர்   அதிவேக  ரயில்  (எச்எஸ்ஆர்)  மீது   புரிந்துணர்வு  ஒப்பந்தம்  கையெழுத்திடப்படும்  நிகழ்வில்  கலந்துகொள்ள   ஒரு-நாள்    அலுவல்  பயணம்   மேற்கொண்டு  இன்று  மலேசியாவின்   நிர்வாகத்    தலைநகரான   புத்ரா  ஜெயாவுக்கு   வந்து   சேர்ந்தார்.

பிரதமர்     நஜிப்   அப்துல்    ரசாக்,   பிற்பகல்    மணி  1-க்குப்   பிரதமரின்   அதிகாரத்துவ   இல்லமான    ஸ்ரீபெர்தானாவுக்கு   தம்    குழுவினருடன்    வந்து   சேர்ந்த  லீ-யை   வரவேற்றார்.

இருவரும்  தனியே  சந்தித்துப்   பேச்சு   நடத்தினார். பின்னர்  நஜிப்பின்  பகல்  விருந்துபசரிப்பில்  லீ  கலந்து  கொண்டார்.

பகலுணவுக்குப்  பின்னர்  எச்எஸ்ஆர்   கையெழுத்திடும்    நிகழ்வில்  இருவரும்   கலந்து  கொள்வர்.

அந்நிகழ்வை    அடுத்து   நஜிப்பும்   லீயும்   கூட்டாக    செய்தியாளர்   கூட்டமொன்றை   நடத்துவார்கள்.