அம்னோவிலிருந்து வெளியேறிய மூத்த தலைவர் ‘மனவெறுப்படைந்த டாக்சி ஓட்டுனர்’: நஸ்ரி கிண்டல்

nazriஅம்னோவிலிருந்து    வெளியேறிய   உறுப்பினர்களைச்  சிறுமைப்படுத்திய     உச்சமன்ற   உறுப்பினர்    முகம்மட்  நஸ்ரி   அப்துல் அசீஸ்,     அவர்களில்   ஒருவரை  “மனவெறுப்படைந்த   டெக்சி   ஓட்டுனர்”  எனக்  கிண்டல்   செய்தார்.

நேற்று  கேலாங்  பாத்தா   அம்னோ    நிரந்தர    அவைத்   தலைவர்   பஹாரோம்    அப்துல்  கனியும்    கூலாய்    அம்னோ    துணைத்   தலைவர்     டோஸ்ரின்  ஜர்வந்தியும்   தத்தம்    தொகுதிகளின்    ஆண்டுக்கூட்டத்தில்   கட்சியிலிருந்து   விலகுவதாக    அறிவித்ததை   அடுத்து    நஸ்ரி  இவ்வாறு   கூறினார்.

எதிர்வரும்   தேர்தலில்   போட்டியிடும்   ஆசை  அவர்களுக்கு  இருக்கிறது.  அதனால்தான்     பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா   கட்சியில்  சேரும்  நோக்கத்தோடு    அவர்கள்  விலகியுள்ளனர்.

“அம்னோவிலிருந்தால்  அவர்களால்  போட்டியிட   இயலாது.   முகைதின்  யாசின்   நிச்சயம்    அவர்களுக்கு     இடம்  கொடுப்பார்”,  என   நஸ்ரி   கூறினார்.

மேலும்,  அடிநிலை  உறுப்பினர்கள்  விலகுவதால்   அம்னோ   பாதிப்படையாது     என்றும்   அவர்   சொன்னார்.