அஸ்மின்: தேர்தல் முன்கூட்டி நடத்தப்பட்டாலும் நேரடிப் போட்டிக்கு ஏற்பாடு செய்துகொள்ள முடியும்

azminஅரசியல்     அரங்கில்   புதிய   வரவாக    பார்டி    பிரிபூமி  பெர்சத்து  மலேசியா  வந்திருந்தாலும்    பொதுத்   தேர்தல்   முன்கூட்டியே     நடத்தப்பட்டாலும்    அடுத்த   பொதுத்  தேர்தலில்  எல்லாத்    தொகுதிகளிலும்   நேரடிப்   போட்டிதான்   என்பதில்   உறுதியாக  இருக்கிறார்    பிகேஆர்   துணைத்   தலைவர்     அஸ்மின்   அலி.

“நான்  எப்போதுமே  ஒரு   நன்னம்பிக்கையாளன்”,  என்றாரவர்.

நாட்டில்  மாற்றத்தைக்   கொண்டுவருவதற்காக     விரிவான  அக்கறையின்   அடிப்படையில்     கலந்து  பேசி   இதற்கு    இணக்கம்  காண  முடியும்   என்று   அவர்  சொன்னார்.

தொகுதி   ஒதுக்கீடு   குறித்து   தொடக்கநிலை   பேச்சுகள்    ஏற்கனவே   தொடங்கி   நடைபெற்று    வருவதாகக்  கூறிய     சிலாங்கூர்   மந்திரி   புசாருமான    அஸ்மின்,  பிகேஆர்   ‘எதற்கு   ஆயத்தமாக’  உள்ளது    என்றார்.