சாபாவில் ஆகாயப் படை ஹெலிகாப்டர் பள்ளியில் விழுந்து நொறுங்கியது

heliஇன்று    காலை சாபாவில்   பாலூங்    இடைநிலைப்  பள்ளித்   திடலில்   அவசரமாக     தரை  இறங்க  முயன்ற    அரச    ஆகாயப்   படை    ஹெலிகாப்டர்  ஒன்று     விபத்துக்குள்ளானது.

அதில்  பயணித்த  பணியாளர்கள்   அனைவரும்   பாதுகாப்பாக   உள்ளனர்   எனச்  செய்திகள்   கூறுகின்றன.

சமூக  வலைத்தளங்களில்   வலம் வரும்    நிழல்படங்கள்   ஒருவருக்குத்    தலையில்   காயம்   பட்டிருப்பதைக்   காட்டுகின்றன.  காயமடைந்தவர்   பள்ளி  மாணவர்   என்று  கூறப்படுகிறது.  ஆனால்,  அதை  உறுதிப்படுத்திக்கொள்ள   முடியவில்லை.

இதனிடையே  உத்துசான்   ஆன்லைன்   சில    வட்டாரங்களை  மேற்கோள்  காட்டி    காயமடைந்தவர்   விமானிதான்   என்று   கூறுகிறது.

அரச   மலேசிய  ஆகாயப்  படை    விபத்து   நிகழ்ந்த   இடத்துக்கு  மீட்புக்  குழு  ஒன்றை   அனுப்பி  வைத்துள்ளதுடன்   விபத்தை  ஆராய  விசாரணைக்  குழு  ஒன்றையும்  அமைத்துள்ளது.