அமைச்சு: டீசல் இல்லாததால் 369 பள்ளிகளுக்கு மின்சார விநியோகம் இல்லை

 

Diselnoடீசல் இல்லாததால் சரவாக்கில் மொத்தம் 369 கிராமப்புற பள்ளிகளுக்கு மின்சார விநியோகம் இல்லாமல் போய்விட்டது.

டீசல் விநியோகம் செய்ய வேண்டிய குத்தகையாளர்கள் அவர்களுடைய குத்தகை ஒப்பந்தம் கடந்த ஆண்டில் முடிவுக்கு வருவதற்கு முன்பு டீசல் விநியோகம் செய்யத் தவறி விட்டனர் என்று கல்வி அமைச்சு கூறுகிறது.

30 டீசல் விநியோகம் செய்பவர்களின் ஒப்பந்தம் 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்காகும்.

பள்ளிக்கூட முதல் நாளான இன்று பள்ளிகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுவதை கல்வி அமைச்சு மறுத்தது.

அமைச்சு மேற்கொண்ட சோதனையில் அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 1, 2017 இல் மின்சார விநியோகம் பழைய நிலைக்குத் திரும்பியது என்று அது கூறிற்று.