கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உதவியாளர் தெங்கு ஸரிபுடின் தெங்கு அஹ்மட்டின் பத்திரிகை அறிக்கைகள்மீது முக்ரிஸ் மகாதிர் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் முதலிரு பத்திரிகை அறிக்கைகள்மீதான வழக்கைத் தள்ளுபடி செய்தது.
ஆனால், மூன்றாவது நான்காவது அறிக்கைகள் கெடாவின் முன்னாள் மந்திரி புசார் முக்ரிஸைத்தான் குறிப்பிடுகின்றன என்பதால் அவற்றின்மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகக் கூறியது.