14 ஆவது பொதுத் தேர்தலில் 30 விழுக்காடு பெர்சத்து வேட்பாளர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும்

 

bersatuyouthsஅடுத்து வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பார்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா (பெர்சத்து) வின் வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் 35 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சடிக் அப்துல் ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்பார்ப்பு கட்சியின் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிருடன் நடத்தப்பட்ட விவாதத்தின் அடிப்படையில் அமைகிறது என்று சைட் சுபாங் ஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இப்போதைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை (வேட்பாளர்கள்) பற்றிய நோக்கம் இல்லையென்ற போதிலும், முக்ரீஸ் அதிகமான இளைஞர்கள் போட்டியில் இறங்குவதை விரும்புகிறார் என்று தம்மால் கூற முடியும் என்று சைட் மேலும் கூறினார்.

30 விழுக்காடு வேட்பாளர்கள் இளைஞர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றாரவர்.