ஹாடி தீர்மானம் தொடர்பில் முஸ்லிம்- அல்லாத பிஎன் கட்சிகள் பிரதமரைச் சந்திக்கும்

dr subraபிஎன்   உறுப்புக்   கட்சிகள்  இவ்வாரம்   பிரதமரும்   பிஎன்  தலைவருமான   நஜிப்   அப்துல்   ரசாக்கைச்  சந்தித்து      1965  ஷியாரியா   நீதிமன்ற( குற்றவியல்  நீதி)த்   திருத்தச்   சட்டம்    அல்லது   சட்டம்   355 குறித்து  விவாதிக்கப்  போவதாக   மஇகா   தலைவர்   டாக்டர்   எஸ்.  சுப்ரமணியம்   கூறினார்.

“நாங்கள்   காத்திருப்போம்.  கூட்டம்   நடந்த  பின்னர்தான்   எங்கள்  நிலைப்பாடு   தெரிய  வரும்”,  என  நேற்று   நாடாளுமன்ற  வளாகத்தில்    சுப்ரமணியம்  கூறினார்.

இரண்டு   வாரங்களுக்குமுன்    மஇகா   நஜிப்பைச்      சந்தித்தபோது    அதன்   நிலைப்பாட்டை    எடுத்துரைத்தது   என்றும்   அதைப்    பிரதமர்   உணர்ந்து   கொண்டார்   என்றும்   அவர்   சொன்னார்.