இரண்டு கட்சிகள், நான்கு என்ஜிஓ-கள் சோரோஸிடமிருந்து பண உதவி பெற்றன- ஜேஎம்எம் குற்றச்சாட்டு

jmmஇரண்டு   அரசியல்   கட்சிகளும்   ஆர்ஓஎஸ்   பதிவுக்காகக்  காத்திருக்கும்   நான்கு  அரசுசாரா   அமைப்பு(என்ஜிஓ)களும்   அரசாங்கத்தைக்  கவிழ்ப்பதற்காக    வெளிநாட்டிலிருந்து  பண  உதவி    பெற்றுள்ளனவாம்.

ஜாரிங்கான்   மலாயு   மலேசியா   (ஜேஎம்எம்) தலைவர்   அஸ்வாண்டின்  ஹம்சா  அவ்வாறு   குற்றஞ்சாட்டுவதாக    நியு  ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்  கூறியது.  அதன்   தொடர்பில்   ஆர்ஓஎஸ்- ஸிடம்  மகஜர்   ஒன்றைத்   தாக்கல்     செய்த    அவர்,  அவ்விவகாரத்தை    ஆராய   வேண்டும்    என்றும்   கேட்டுக்  கொண்டிருக்கிறார் .

அதற்கான     சான்றுகள்   குறிப்பாக,    அந்த   அரசியல்   கட்சிகளும்    என்ஜிஓ-களும்    அமெரிக்கக்  கோடீஸ்வரர்   ஜார்ஜ்  சோரோஸ்   உள்பட,  வெளிநாட்டுப்   பணயுதவியாளர்களைச்     சந்திப்பதைக்   காண்பிக்கும்   படங்கள்   தன்  கைவசமிருப்பதாக   அவர்  கூறிக்கொண்டார்.