ஜொங்-நாம் சடலம் இன்னும் கோலாலும்பூரில்தான் உள்ளது

subraகடந்த     மாதம்   மலேசியாவில்  கொல்லப்பட்ட   கிம்  ஜொங்-நாமின்  உடல்  விரைவில்    நாட்டைவிட்டு    கொண்டு    செல்லப்படும்    என்று   செய்திகள்   வந்துள்ள   வேளையில்     அது   இன்னமும்   கோலாலும்பூரில்தான்  உள்ளது   எனச்   சுகாதார   அமைச்சர்   டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்   இன்று    தெரிவித்தார்.

“அதில்   எந்த   மாற்றமும்  இல்லை”,  என்று  சுப்ரமணியம்   செய்தியாளர்களிடம்   கூறினார்.

அவரது  உடலை   என்ன   செய்வது   என்பதைக்  கூற   அவரின்  உறவினர்   எவரும்   இதுவரை   முன்வரவில்லை  என்றாரவர்.

நேற்று  ஊடகத்   தகவல்கள்   அவரது   உடலை  பெய்ஜிங்   கொண்டு   செல்வதற்கு   ஏற்பாடுகள்   செய்யப்பட்டு   வருவதாகக்  கூறின.