ஜோகூர் சுல்தானை அவமதித்த பெண் கைது

copsஜோகூர்    ஆட்சியாளர்    சுல்தான்   இப்ராகிம்    அல்மர்ஹும்    சுல்தான்    இஸ்கண்டரையும்   ஜோகூர்   அரச  குடும்பத்தையும்     முகநூலில்    அவமதித்த   ஒரு  பெண்    நேற்றிரவு  கைது   செய்யப்பட்டுத்   தடுத்து  வைக்கப்பட்டார்.

அச்சம்பவம்    குறித்த  புகார்  ஒன்று     ஏப்ரல்    9-இல்  பிற்பகல்  மணி    12.30க்கு  கிடைக்கப்  பெற்றதாக   ஜோகூர்   போலீஸ்    தலைவர்   வான்   அஹ்மட்      நஜ்முடின்  முகம்மட்    கூறினார்.

“அதைத்  தொடர்ந்து   முகநூலில்   மனம்  புண்படும்படியான   கருத்தைப்  பதிவு   செய்தவரை    அடையாளம்   காண   விசாரணை   முடுக்கி  விடப்பட்டது.

“அதன்  விளைவாக   நேற்றிரவு   மணி   11.30க்கு   கோலாலும்பூர்,  பிரிக்பீல்ட்சில்   48-வயது   பெண்ணொருவரைப்  போலீசார்    கைது    செய்தனர்.  முகநூலில்   பதிவிட்டவர்   அவர்தான்   என   நம்பப்படுகிறது”,  என்று   நஜ்முடின்   ஓர்    அறிக்கையில்   கூறினார்