காணாமல் போய்விட்ட” சோங் திரும்பி வந்துள்ளார்

Chongreturnsபோலீஸ் தகவலின்படி, காணாமல் போய்விட்ட முன்னாள் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் பீட்டர் சோங் திரும்பி வந்துவிட்டார்.

காணமல் போய்விட்ட பீட்டர் சோங் இன்று மதியம் பட்டாயாவிலிருந்து திரும்பி வந்து விட்டார் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் டிவிட் செய்துள்ளார்.

அவர் மேற்கொண்டு எவ்விதத் தகவலும் அளிக்கவில்லை.

கடந்த ஏப்ரல் 5 இல் சோங் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவர் தாய்லாந்தை நோக்கி பஸ்சில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கடத்தப்படவில்லை என்று போலீஸ் கூறியது.

பெப்ரவரி 13 லிருந்து காணாமல் போய்விட்ட பாதிர்யார் ரேமண்ட் கோ பற்றிய தகவல் இருப்பதாகக் கூறிக்கொண்ட ஒருவரைச் சந்திக்க சோங் ஹாத்யாயிக்கு சென்றார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் தெரிவித்ததாக மலாய் மெயில் ஓன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

தாம் பட்டாயாவில் கடத்தப்பட்டதாக சோங் கூறிக்கொண்டதாக அமர் தெரிவித்தார். சோங் திரும்பி வருவதற்கு அவரது மகன் டிக்கட் வாங்கியதாகவும் அமர் கூறினார்.

வேறு சில தகவல்களின்படி, சோங் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.