பிரதமராவதற்கு தயக்கத்துடனான தமது விருப்பத்தை மீண்டும் தெரிவிக்கிறார் மகாதிர்

 

Reluctant YesbyMமுன்னாள் பிரதமர் மகாதிர் இன்னொரு முறை பிரதமர் ஆகும் எண்ணத்திற்கு வலுவூட்டுவது போல் தெரிகிறது.

இது நடக்கலாம், ஆனாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று நிக்கி ஏசியன் ரிவியுவுடனான உரையாடலின் போது மகாதிர் கூறினார்.

“வேட்பாளர் இல்லையென்றால்…நான் முயற்சிப்பேன், அதற்கு அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன்”, என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், அடுத்த பொதுத்தேர்தலில் எதிரணி வெற்றி பெறுவதற்கு உதவுவது தமது தலையாய நோக்கம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அவர் இது போன்ற கருத்தை இப்போது இரண்டாவது முறையாக தெரிவித்துள்ளார்.