சிவராசா சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்

 

sivarasaapologisedtosultanகம்போங் மெலாயு சுபாங் அன்-நூர் மசூதியின் பிரார்த்தனை மண்டபத்தில் பேசியதற்காக பிகேஆர் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

மசூதியில் என்ன நடந்தது என்பது பற்றி விளக்கம் அளிக்கும் கடிதம் ஒன்றை கடந்த திங்கட்கிழமை சுல்தானுக்கு அனுப்பியதாக சிவராசா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அக்கடிதத்தில் தமது பேச்சு செராமாவோ  அரசியலோ அல்ல என்று தாம் விளக்கம் அளித்துள்ளதாக சிவராசா கூறினார்.

அரசியவாதிகள் மசூதியில் பேசுவதற்கு தாம் விதித்துள்ள தடையுத்தரவை சுல்தான் மீண்டு நினைவுறுத்தியுள்ளார்.