ஐஜிபி: 1எம்டிபி பற்றி ஏஜி ஆழமாக நோண்டிப் பார்க்கச் சொன்னார்

 

IGP Khalidசட்டத்துறை அலுவலகம் (ஏஜி அலுவலகம்) 1எம்டிபி விவகாரத்தை மேலும் விசாரிக்கமாறு போலீஸைக் கேட்டுக்கொண்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறினார்.

“நான் இதை முன்பு சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எழுந்துள்ள சில கேள்விகள் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தும்படி ஏஜி அலுவலகம் எங்களிடம் கூறியிருந்தது. அதன்படி, நாங்கள் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்”, என்று புக்கிட் அமானில் இன்று நடைபெற்ற ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியின் போது காலிட் செய்தியாளர்களிடம் கூறினார்.