எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட ஷாபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

நேற்று, பார்டி வாரிசான் சாபா தலைவர் முகம்மட் ஷாபி அப்டால் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

“அவருக்கு இரத்த அழுத்தம் உண்மையில் மிகவும் உயர்ந்திருந்தது.

“அதனால்தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எம்ஏசிசி அதிகாரிகள் அவரை கெபாயான் போலீஸ் தலைமையக லாக்-அப்பில் வைத்திருக்கத்தான் விரும்பினார்கள். அதற்கு நாங்கள் முற்றாக எதிர்ப்புத் தெரிவித்தோம்”, என வாரிசான் உதவித் தலைவர் ஜுன்ஸ் வொங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.எம்ஏசிசியால் கைது செட்டப்பட்ட ஷாபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்