ஐஜிபி: ஸாகிர்  நாய்க் கண்காணிக்கப்படுகிறார்

 

சர்ச்சைக்குரிய இந்திய சமயப் போதகர் ஸக்கீர் நாய்க்கின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இன்று கூறினார்.

அவரின் நகர்வுகளையும் செயல்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவற்றில் நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலான ஏது இருக்கின்றவா என்று கவனித்து வருகிறோம் என்று ஐஜிபு முகம்ட் பூஸி கூறினார்.

அவர் எங்கிருக்கிறார் என்பது எங்களுக்கு ஓரளவு தெரியும். ஏனென்றால் அவர் பாதுகாப்புத்துறையினரின் கவனத்தை ஈர்க்கும் தனிமனிதர் நிலையுடையவர் என்று செராஸில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இன்று அவர் கூறினார்.

இது ஒரு உணர்ச்சிகரமான விவகாரம் என்று குறிப்பிட்ட அவர், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லாவிட்டால், நாட்டில் அனைவருக்கும் பயணம் செய்யும் சுதந்திரம் உண்டு என்று அவர் மேலும் கூறினார்.