மகாதிர் திருப்பி அனுப்பிய விருதுகள் கிடைக்கப் பெற்றதாக சிலாங்கூர் சுல்தான் தெரிவித்தார்

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹம்சாவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை டிசம்பர் 7 இல் சிலாங்கூர் அரண்மனைக்கு திருப்பி அனுப்பினர்.

அவர்கள் திருப்பி அனுப்பிய விருதுகள் கிடைக்கப் பெற்றதாகவும் அவற்றை சிலாங்கூர் சுல்தான் எவ்வித ஆட்சேபமும் இன்றி பெற்றுக்கொண்டதாகவும் சிலாங்கூர் அரச மன்றத்தின் செயலாளர் ஹனாபிஷா ஜாயிஸ் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.

திருப்பி அனுப்பப்பட்ட அந்த விருதுகள் இரத்து செய்யப்படுவது தற்போது நடைமுறையிலிருக்கும் முறைகளுக்கு ஏற்ப செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.