நூர் ஜஸ்லான் ‘ஒரு சின்னப் பையன்’, மகாதிர் கூறுகிறார்

 

சிலாங்கூர் சுல்தான் வழங்கிய விருதுகளை மகாதிர் திருப்பி அனுப்பியது பற்றி கருத்துரைத்த துணை உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான், அச்செயல் ஓர் அவமதிப்பாகக் கருதப்படலாம் என்றார்.

நூர் கூறியிருந்தது பற்றி மகாதிரிடம் கேட்கப்பட்ட போது, ஜஸ்லான் ” இன்னும் முதிர்ச்சியடைய வேண்டிய ஒரு சின்னப் பையன். அது அவருடை கருத்து’ என்று மகாதிர் கூறினார்.

நூர் ஜஸ்லான் இப்போதுதான் முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். அவர் எப்படி வியாக்கியானம் செய்ய விரும்புகிறார் என்பது அவரைப் பொறுத்தது என்று மகாதிர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் சுல்தானின் சினத்திற்கு ஆளான மகாதிர், அவருக்கு சிலாங்கூர் சுல்தானால் அளிக்கப்பட்ட விருதுகளை அவர் திருப்பிய அனுப்பியது பெர்சத்துவை கடும் விமர்சனத்துக்கு உட்படுத்தியிருப்பதாக கூறப்படுவது பற்றிய வினாவுக்கு பதில் அளித்த மகாதிர், சமூக ஊடகத்தை நீங்கள் படித்தால், அந்தக் கடும் விமர்சனம் பற்றி தெரிந்து கொள்வீர்கள் என்று கூறிய அவர், தாம் மேற்கொண்டு எதையும் கூற விரும்பவில்லை, ஆனால் நீங்கள் சமூக ஊடகத்தில் படிக்கலாம் என்றார்.